அமெரிக்காவுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை ஈரான் நிராகரித்தது – அமெரிக்காவால் வெளியிடப்பட்ட செய்திகள் அவர்களின் ஊடக விளையாட்டு என மேலும் தெரிவித்தது

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதை ஈரான் மறுப்பு; ‘வாஷிங்டனின் அதிகப்படியான கோரிக்கைகளை’ சுட்டிக்காட்டியுள்ளது.
நாளை நடைபெறவிருப்பதாக அமெரிக்கா உரிமை கோரிய இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டதை ஈரான் மறுத்துள்ளது.
“வாஷிங்டனின் அதிகப்படியான கோரிக்கைகள், எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள், நிலைப்பாட்டில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், தொடர்ச்சியான முரண்பாடுகள் மற்றும் போர்நிறுத்தத்தை மீறுவதாகக் கருதப்படும் தற்போதைய கடற்படை முற்றுகை” ஆகியவற்றை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA விமர்சித்துள்ளது.
“இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து வெளியான செய்திகள் உண்மையல்ல” என்று கூறியுள்ள அந்த நிறுவனம், “அமெரிக்காவால் வெளியிடப்பட்ட செய்திகள் அவர்களின் ஊடக விளையாட்டு மற்றும் ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் நடத்தும் ‘பழி போடும் விளையாட்டின்’ (blame game) ஒரு பகுதியாகும்” என்றும் சேர்த்துக் கூறியுள்ளது.


