பொருளாதாரம் தொடர்பாக நான் கூறிய ஒரு கருத்து, ”எதிர்காலம் நிச்சயமற்றது” என திரிபு படுத்தப்பட்டு, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது ; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பொருளாதாரம் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து ஒன்றை திரிபுபடுத்தி, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செய்தித்தாள் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டமை குறித்து இன்று (18) கருத்து தெரிவித்தார்.
அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட செய்தித்தாளுக்கு அறிவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.
எனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது,”
சமீபத்திய புதினத்தாள் செய்தி ஒன்று தனது கருத்துக்களைத் திரித்துக் கூறியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார், மேலும் இது வருடாந்திர செலவினம் முந்தைய கணிப்புகளைக் காட்டிலும் கணிசமாக உயரக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.
இதேவேளை, ரூபாயின் மதிப்பு ஓரளவுக்கு வீழ்ச்சியடைவது இலங்கை மாத்திரம் எதிர்நோக்கும் பிரச்சினை அல்ல என்றும், பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் ஒப்பிட்டளவில் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எரிபொருளை இறக்குமதி செய்யும் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டு நாணயம் பெறுமதி இழக்கும் சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.



