News

குடும்பத் தகராறு முற்றியதில் 61 வயது மனைவியை கொன்றுவிட்டு கைதான 59 வயது கணவனும் உயிரிழப்பு

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் படிவெல பகுதியிலேயே வசிந்து வந்த 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

நேற்று (10) காலை வேளையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த 59 வயதுடைய சந்தேக நபரான கணவனை பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

இருப்பினும், கைது செய்யப்படும் போது சந்தேக நபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிங்கிரிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button