News

எந்தவித  வெளிநாட்டு கடன்களையும் பெறாமல், உள்நாட்டு நிதி ஒதுக்கீடுகளின் மூலம் 15 பில்லியன் ரூபாய் செலவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை (Terminal 1) முழுமையாக புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கபட்டது

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை (Terminal 1) முழுமையாக புனரமைத்து, பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்கான நீண்டகால நடவடிக்கையாக 15 பில்லியன் ரூபாய் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்தின் பிரகாரம், வெளிநாட்டு கடன்களை நம்பியிருக்காமல், உள்நாட்டு அரச நிதி ஒதுக்கீடுகளின் மூலமே இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு கருத்துத் தெரிவிக்கையில், சுற்றுலாத் துறையின் தேவையை நிவர்த்தி செய்வதற்கு இந்நடவடிக்கை அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன், ஜப்பானிய உதவியின் கீழ் இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறினார்.

உடனடி நிவாரணத்தை வழங்குவதற்காக, தனியார் துறையின் ஆதரவுடன் ஏற்கனவே ஒரு தற்காலிக கூடாரம் (marquee) அமைக்கப்பட்டுள்ளதுடன், இது 14 சோதனைச் சாவடிகளை (check-in counters) அதிகரித்துள்ளதுடன், விமான நிலையம் தினசரி கூடுதலாக 10 முதல் 20 விமானங்களைக் கையாள்வதற்கும் வழிவகுத்துள்ளது.

புனரமைப்புத் திட்டத்தில் புறப்படும் பகுதி (departure hall) விரிவாக்கம், பாதுகாப்பு மற்றும் குடிவரவு வரிசைகளைக் குறைத்தல், வருகை தரும் பகுதியின் (arrivals section) மறுவடிவமைப்பு மற்றும் சாமான்களைக் கையாளும் அமைப்புகளை (baggage handling systems) நவீனமயமாக்குதல் ஆகியவை உள்ளடங்கும்.

இப்பணிகள் நிறைவடைந்தவுடன், முதலாவது முனையத்தின் வருடாந்த பயணிகள் கொள்ளளவு 6 மில்லியனிலிருந்து (தற்போது 10 மில்லியன் வரை நீடிக்கப்பட்டுள்ளது) 15 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button