News
ஈஸ்டர் பயங்கரவாதத் தா*க்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனவும் மரண தண்டனை தீர்ப்பும் நீதிமன்றால் வழங்கப்பட்டது .

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணை அமர்வின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் அறிவித்துள்ளது.
குற்றவியல் அலட்சியம், கடமையை நிறைவேற்றத் தவறுதல் மற்றும் கொலைக்கு துணைபுரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



