சர்வதேச இராணுவக் கூட்டணியான “நேட்டோ” வில் இணைய இலங்கை தயாராகிவருவதாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து வெளிப்பாடு
நேட்டோ அமைப்புடன் இலங்கை ராணுவம் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபடத் தயாராகி வருவதைக் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
நேட்டோ என்பது ஏகாதிபத்திய நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என அக்கட்சி கூறுகிறது. பாதுகாப்பு அமைச்சு நேட்டோவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை உலகிற்கு வெளிப்படுவதாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 01 ஆம் திகதி வெளியிட்ட உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.
— சதுர பமுனுவ



