News

கிளப் வசந்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற சற்றுமுன் எடுக்கப்பட்ட புகைப்படம்

அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வௌியாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி கே.சுஜீவாவிற்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற பொலிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவியின் பயணப் பொதியில் ரிவோல்வர் ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டு குறித்த இடத்தில் சலூன் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அங்கும் இவ்வாறான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button