News
உள்ளூராட்சி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம் ! எதிர்கட்சிக்கு செல்வதற்கு இடமில்லாமல் போகும் !!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் எதிர்கட்சிக்கு செல்வதற்கு இடமில்லாமல் போகும் என கூறிய அமைச்சர் தேங்காய் பிரச்சினை தமது அரசின் தவறால் இடம்பெற்ற ஒன்றல்ல்ல என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என கூறினார்.
சீரற்ற காலநிலை காரணமாக உப்பு தாட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், சில காரணங்களல் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறிய அவர் அவை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தினை முடியுமானால் தோல்வியடைய செய்து காட்டுமாறு அவர் கூறினார்.



