News

நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா தலைமையில் பாடசாலை கழிப்பறை தொகுதிக்கு அடிக்கல் நாட்டு விழா…

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி அம்பிகா சாமுவேல் அவர்களின் தலைமையில், ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் புதிய கழிப்பறைத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” (ගම් දஹසක වැඩ දහසක්) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறித்த பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரை, அப் பாடசாலை மாணவர்கள் தாரை தப்பட்டை மற்றும் வாத்தியக் குழுவினரின் இசை முழக்கங்களுடன் அமோகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பிரதேச அரசியல் அதிகார சபையின் பிரதிநிதிகள், அதிபர் உள்ளிட்ட ஆசிரியக் குழாம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button