News
உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு போலி 5000 ரூபா பணத்தை கொடுத்த இளைஞன் பொலிஸாரால் கைது

கொலன்னாவையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மூன்று 5,000 ரூபாய் போலி நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கொலன்னாவை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில் உணவுக்காக 5,000 ரூபாய் போலி நோட்டை வழங்கி பணம் செலுத்த முயன்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணம் குறித்து சந்தேகமடைந்த உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.



