சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்தில் கைது
சமகி ஜன பலவேகய (SJB) கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ரிப்பீட்டர் (repeater) ரக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமைக்காகவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் உறுப்பினர் எவ்வாறு துப்பாக்கியைப் பெற்றார் மற்றும் அது ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



