News
மாணவர்கள் டெங்கு நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பு பெற பாடசாலைகளில் நீளமான ஆடைகளை அணிவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது
டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்பு கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு பாடசாலைகளுக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
பாடசாலை அதிபர்கள், பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிபர்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



