News

கொழும்பு – தனியார் பேருந்து நிலைய மலசலக்கூடத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது 

கொழும்பு – தனியார் பேருந்து நிலையத்தின் 04ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.



குறித்த பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.



இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.



சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று நிறுத்துப் பார்த்தபோது, குறித்த பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.



சந்தேகத்திற்கிடமான பிக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button