News
இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடு, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படவில்லை – அப்படி யாரும் தவறாக கருதவும் வேண்டாம் ; ஞானசார தேரர்

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின் விருப்பத்தின் பேரிலாகும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன் அவர், யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் கூறியுள்ளார்.



