News

இந்த அரசாங்கம், உண்மையிலேயே தினமும் மக்களுக்கு கண்ணிவெடி வைக்கிறது… தினமும் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது ; சஜித்


இப்போது இருக்கின்ற மிகப்பெரிய கண்ணிவெடி என்னவென்றால், IMF (சர்வதேச நாணய நிதியம்) கூறுவதையும் விட அதிகமாக வரி விதிப்பதுதான்.


IMF-ஐ உண்மையிலேயே திருப்திப்படுத்துவதற்கு, முதன்மை எச்சத்தில் 2.3% இருந்தால் போதும் என்று IMF கூறும்போது, மக்களின் தலையில் வரிச் சுமையைச் சுமத்தி, அதை 5.4% வரை உயர்த்தி, உண்மையிலேயே இந்த தற்போதைய அரசு, IMF-ன் சொற்படி கேட்கும் கீழ்ப்படிதலான ஒரு விசுவாசியாக மாறியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.


ஏனெனில், இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி, ஏழை மக்களைப் பற்றி, சாதாரண மக்களைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் இப்போது இவர்கள் பின்பற்றுவது IMF இலக்குகளையும் தாண்டிய ஒரு இலக்கை. எனக்குத் தெரியவில்லை, அப்படி இலக்கையும் தாண்டிய பெரிய இலக்குக்குச் செல்லும்போது நாட்டின் வாழ்க்கைச் செலவு குறையுமா என்று?


ஏனெனில்  வாழ்க்கைச் செலவுப் பிரச்சனை, பணவீக்கப் பிரச்சனை மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால், அரசின் தொகையியல் மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் சொல்கிறது,

ஒரு நபர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,000 ரூபாய் போதுமானது என்று.
நான் கேட்க விரும்புகிறேன், இதுபோன்ற பொய் தரவுகளின் அடிப்படையில் செயல்படும் அரசாங்கம், உண்மையிலேயே தினமும் மக்களுக்கு கண்ணிவெடி வைக்கிறது. Inth

தினமும் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.
இன்று வறுமையை ஒழிப்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை. வறுமை 30% முதல் 40% வரை உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. அவர்களின் நிலங்கள், சொத்துக்கள் பகிரங்க ஏலத்திற்கு வருகின்றன. இன்று சூரிய சக்தி மின்சாரத்தை அழிக்கும் கொள்கையை இந்த அரசு செயல்படுத்துகிறது.


அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகைகளை வழங்குவதில்லை, ஆனால் எரிபொருள் மாஃபியாவுக்கு வழங்க வேண்டிய தொகைகளை மிக அதிவேகமாக (High Speed) செலுத்துகிறது. இதுதான் நாட்டின் நிலைமை.


என்ன பைத்தியக்காரத்தனம் இது? IMF கூறும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 13.9% அரசு வருவாயாக இருந்தால் போதும் என்று கூறும்போது, என்ன பைத்தியக்காரத்தனத்திற்காக இந்த அரசு அதை 15.4% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கிறது? இந்த அளவுக்கு வரி விதிக்கிறது?
இந்த வரிச் சுமையைச் சுமத்தும்போது தொழில்முனைவு வீழ்ச்சியடைகிறது.

யாரும் புதிய வணிகங்களைத் (Startups) தொடங்குவதில்லை. இது சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, சுயதொழில் துறை என அனைத்தையும் பாதிக்கிறது.
சமூகத்தில் பிறக்காத குழந்தை முதல், கர்ப்பிணி தாய் வரை, சமுதாயத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த வரிச் சுமை அளப்பற்ற அழுத்தத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இதுதான் உண்மை நிலை.


எனவே சிறப்பாக, நாம் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம்: நீங்கள் வாக்குறுதி அளித்த வளமான நாடு, அழகான வாழ்க்கை என்பவற்றுக்கு மாறாக, IMF-ன் வரி இலக்குகளையும் தாண்டிச் சென்று, வரிச் சுமையைச் சுமத்தி, அதிக வரிகளைச் சுமத்தி, மக்களின் தலையில் அழுத்தத்தைச் சுமத்தி, ஒருபோதும் இந்த அழகான நாட்டை வளமான எதிர்காலமாக மாற்ற முடியாது என்ற உண்மையை நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போதாவது

தரைமட்டத்தில் காலூன்றி வாழும் இந்த நாட்டின் 220 லட்சம் மக்களுக்கு, உண்மையாகவும் யதார்த்தமாகவும் சேவை செய்ய அரசுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button