News
அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று முதல் மக்கள் பேரணித் தொடர்
அரசாங்கத்தின் 02 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் தொடங்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று (06) முதல் ஆரம்பமாகிறது.
ஜனாதிபதி அනුர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தில் இது நடைபெறவுள்ளது.
அதன்படி, முதலாவது மக்கள் பேரணி இன்று பிற்பகல் 02 மணிக்கு புலத்சிங்ஹலயிலும், பிற்பகல் 03:30 மணிக்கு பேருவளையிலும் நடைபெறவிருக்கின்றது.
இதுதவிர, பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டும் எதிர்காலத்தில் மக்கள் பேரணிகளை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு விழா, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிட்டகோட்டேயிலுள்ள சிறி கொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.



