News

துபாயில் கைது செய்யப்பட்ட “கொண்ட ரஞ்சி” இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது

துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், “கொண்ட ரஞ்சி” என அழைக்கப்படும் ரஞ்சித் குமார் என்ற பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் கைது செய்யப்பட்ட கொண்ட ரஞ்சி, அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என பொலிஸாரின் முந்தைய அறிக்கைகளில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தை சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியது தொடர்பான விசாரணைகளுடனும் இவருக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button