News

அடுத்த அதிரடி – 10 இலட்சமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை இரண்டரை இலட்சமாக  குறைக்கப்படுகிறது … அமைச்சரவை அனுமதி

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பாராளுமன்ற உயர்ந்தபட்ச உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் முறையை காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூபாய் 1,000,000/- காப்புறுதிக் காப்பீட்டு எல்லையை ரூபாய் 250,000/- ஆகக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளார். 

அதற்கமைய, 2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000/- ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button