News

நீண்ட காலப் போருக்கு ஈரான் முழுமையாகத் தயாராகி விட்டதாகவும், இனிமேல் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், எதிரிகள் ‘வலிமிகுந்த அடிகளை’ எதிர்பாருங்கள் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவிப்பு

நீண்ட காலப் போருக்கு ஈரான் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், இதுவரை மோதலில் பயன்படுத்தப்படாத மேம்பட்ட ஆயுதங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு அறிக்கையில், பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி கூறுகையில், வரவிருக்கும் புதிய தாக்குதல்களில் ஈரானின் எதிரிகள் “வலிமிகுந்த அடிகளை” எதிர்பார்க்க வேண்டும் என்றார்.

“ஈரானின் புதிய முயற்சிகள் மற்றும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன,” என்று அவர் கூறினார். “இந்த தொழில்நுட்பங்கள் இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை.”

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த 12 நாள் போருடன் ஒப்பிடுகையில், ஈரான் இப்போது அதிகத் தயார் நிலையில் உள்ளதாகக் கூறிய நைனி, நடந்து வரும் இராணுவ மோதலை “புனிதமான மற்றும் நியாயமான போர்” என்று விவரித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button