“நாங்கள் கேள்விப்பட்ட வரையில், வி*பச்சாரி ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புகள் வெளியானது

அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போது, சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம வெளியிட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமுனுகம, கட்சிக்கு கிடைத்த தகவலின்படி, பாலியல் தொழிலாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் கேள்விப்பட்ட வரையில், விபச்சாரி ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அட்டமஸ்தானாதிபதி தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பான அறிக்கைகள் 15 வயதுடைய சிறுமியொருவருடன் தொடர்புடையவை என்பதை சுட்டிக்காட்டிய சமூக ஊடகப் பயனர்கள், அமுனுகமவின் கூற்றை கேள்விக்குள்ளாக்கியதுடன், முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய மொழி குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகளில், குறிப்பாக குழந்தைகளைக் குறிப்பிடும் போது, பொதுப் பிரமுகர்கள் அதிக பொறுப்புடனும் உணர்திறனுடனும் செயல்பட வேண்டும் என்று பலர் வாதிட்டதுடன், ஒரு மைனர் சிறுமியை எவ்வாறு இத்தகைய சொற்களில் விவரிக்க முடியும் என்றும் பல பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கருத்துக்கள் இணையத்தில் கடுமையான விமர்சனங்களைத் தூண்டியதுடன், அமுனுகம பொருத்தமற்ற மற்றும் உணர்திறனற்ற முறையில் சித்தரிப்பை மேற்கொண்டுள்ளதாக பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



