News
சிறுமி ஒருவரை இன்று காலை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி – சிறுமி தொடர்பில் விபரம் கோரும் வத்தேகம பொலிஸார்

இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.
( Madawala News 13/08/2026)
தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சிறுமி பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.
Wattegama Police Station
0812 476 222


