News

ஒரு யுனிட் மின்சாரத்தை 100 ரூபாய்க்கும் அதிக விலைக்கு அனல் மின் நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்வதாக தகவல் வெளியானது !!

மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல, அரசாங்கம் அனல் மின் நிலையங்களில் இருந்து ஒரு அலகு மின்சாரத்தை 100 ரூபாய்க்கும் அதிக விலைக்கு கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்கள் (Solar Panels) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தை 45 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூரிய சக்தி மின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு அதிகரித்தால், அனல் மின் நிலையங்களில் இருந்து இவ்வாறு அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாமல் போகும் என அதுல குறிப்பிட்டார்.

அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளிலிருந்து கிடைக்கும் தரகுப் பணம் (Commission) மீதான பேராசை காரணமாகவே, அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை முதன்மையாக செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆட்சியாளர்களுக்கு நுகர்வோரின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய தேவை இல்லை என்றும், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருப்பது அதன் மூலம் கிடைக்கும் எரிபொருள் இலாபம் (சுவை) காரணமாகவே என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button